எப்போதும் இல்லாத வகையில் ‘இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது’ - தெண்டுல்கர் கருத்து


எப்போதும் இல்லாத வகையில் ‘இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது’ - தெண்டுல்கர் கருத்து
x
தினத்தந்தி 25 Jun 2018 10:33 PM GMT (Updated: 25 Jun 2018 10:33 PM GMT)

எப்போதும் இல்லாத வகையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது என தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முழு நிறைவுடன் காணப்படுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணிகளில் ஒன்றாக இதனை நான் கணிக்கிறேன். எப்பொழுதும் இல்லாத வகையில் விதவிதமான வேகப்பந்து வீச்சாளர்கள் நமது அணியில் உள்ளனர்.

ஸ்விங் செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார், உயரமான பவுலரான இஷாந்த் ஷர்மா, வித்தியாசமாக பந்து வீசக்கூடிய பும்ரா, மிகவும் வேகமாக பந்து வீசக்கூடிய உமேஷ்யாதவ் என்று நல்ல கலவையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அமைந்துள்ளனர். இதில் புவனேஷ்வர்குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய லெவன் அணியில் எந்தெந்த பந்து வீச்சாளர் இடம் பெற வேண்டும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனை எதிரணியை பொறுத்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Next Story