டி.என்.பி.எல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்ப்பு


டி.என்.பி.எல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 11 July 2018 2:57 PM GMT (Updated: 11 July 2018 2:57 PM GMT)

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி கோலகலமாக துவங்கியது. தொடரின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன.

நெல்லை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. 

இன்று நடைபெற்ற முதல் போட்டியில்,  அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், பாபா இந்திரஜித் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 15 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. 

Next Story