இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் வெளிநாட்டு போட்டியில் விளையாடி சர்ச்சையில் சிக்கிய இந்திய ஜூனியர் வீரர்


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் வெளிநாட்டு போட்டியில் விளையாடி சர்ச்சையில் சிக்கிய இந்திய ஜூனியர் வீரர்
x
தினத்தந்தி 3 Aug 2018 9:00 PM GMT (Updated: 3 Aug 2018 8:26 PM GMT)

சமீபத்தில் இலங்கையில் நடந்த 4 நாட்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) அணியின் கேப்டனாக டெல்லியை சேர்ந்த அனுஜ் ரவாத் செயல்பட்டார்.

புதுடெல்லி,

சமீபத்தில் இலங்கையில் நடந்த 4 நாட்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) அணியின் கேப்டனாக டெல்லியை சேர்ந்த அனுஜ் ரவாத் செயல்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொரிஷியஸ் நாட்டில் நடந்த 20 ஓவர் லீக் போட்டியில் அனுஜ் ரவாத் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் விளையாடியது தற்போது தெரியவந்துள்ளது. அவர் விளையாடிய காட்சி யூடியூப்பில் வெளியானதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த போட்டி தொடரில் விளையாட இந்திய வீரர் மனோஜ் கல்ரா அனுமதி கேட்டு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அனுஜ் ரவாத் மட்டுமின்றி மேலும் சில இந்திய வீரர்களும் அனுமதியின்றி இந்த போட்டியில் பங்கேற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘ஜூனியர் வீரர்கள் எங்களை மீறி அனுமதி இல்லாமல் வெளிநாட்டு தொடரில் விளையாடி இருப்பது துரதிருஷ்டவசமானது. இது மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய வி‌ஷயமாகும்’ என்றார்.


Next Story