ரசிகரிடம் மோசமாக நடந்து கொண்ட வீராட் கோலி


ரசிகரிடம்  மோசமாக நடந்து கொண்ட வீராட் கோலி
x
தினத்தந்தி 20 Sep 2018 5:41 AM GMT (Updated: 20 Sep 2018 5:41 AM GMT)

இந்திய அணியின் தலைவரான கோலி ரசிகர் ஒருவர் ஆசையாக கொடுத்த புகைப்பட பிரேமை வாங்கி பார்க்காமல் அப்படியே தன்னுடைய செக்யூரிட்டியிடம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. #viratkohli #indiacricketteam


மூன்று வித போட்டிகளில் விளையாடி வரும் கோலி, தற்போது ஆசியகோப்பை தொடருக்கான போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆசியகோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக , ரோகித் சர்மா உள்ளார்.இந்நிலையில் ஓய்வில் இருக்கும் கோலி, சமீபத்தில் தன்னுடைய மனைவியான அனுஷ்காவுடன் மும்பை விமானநிலையத்தில் வந்து  இறங்கியுள்ளார்.

அப்போது கோலியின் தீவிர இளம் ரசிகர் ஒருவர் அவர் தொடர்பான புகைப்பட பிரேமை அழகாக வடிவமைத்து கொண்டு வந்து அவரிடம் கொடுத்துள்ளார்.ஆனால் கோலியோ ரசிகர் அப்படி என்ன தான் கொடுத்திருக்கிறார் என்று அதை சற்றும் பார்க்காமல், உடனடியாக தன்னுடைய செக்ரியூட்டியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் அது என்ன என்றாவது கோலி பார்த்திருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த ரசிகரும் கோலி எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையே என்ற ஏமாற்றத்தில் திரும்பியிருப்பார் என்றும் கூறி வருகின்றனர்.


Next Story