இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி - மழையால் ரத்து


இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி - மழையால் ரத்து
x
தினத்தந்தி 21 Sep 2018 10:00 PM GMT (Updated: 21 Sep 2018 8:30 PM GMT)

இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

கொழும்பு,

இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடக்கிறது

Next Story