இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி


இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி
x
தினத்தந்தி 22 Sep 2018 10:15 PM GMT (Updated: 22 Sep 2018 7:11 PM GMT)

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: போட்டியில் இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றிபெற்றது.

கொழும்பு,

இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 131 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் (57 ரன், 40 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story