கேப்டன் பதவியில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார் கவாஸ்கர் பாராட்டு


கேப்டன் பதவியில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார் கவாஸ்கர் பாராட்டு
x
தினத்தந்தி 23 Sep 2018 11:06 PM GMT (Updated: 23 Sep 2018 11:06 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டி அளித்தார்.

துபாய்,

கேப்டன் பதவியில் ரோகித் சர்மாவின் செயல்பாடு என்னை எப்பொழுதும் கவர்ந்து இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை முதல்முறையாக ஏற்ற அவர் அந்த சீசனில் அணியை கோப்பையை வெல்ல வைத்தார். களத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்பதை அவர் நன்கு அறிந்து செயல்படுகிறார்.

இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்கும்போதெல்லாம் அவர் தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை போட்டி தொடரில் கேப்டன் பதவியில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் ரோகித் சர்மா நன்றாக செயல்பட்டு வருகிறார்.

ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணியில் இடம் பிடிக்க தகுதி படைத்தவர். அக்‌ஷர் பட்டேலை விட அவர் சிறந்த பவுலர், பேட்ஸ்மேன், பீல்டர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story