ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து


ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து
x
தினத்தந்தி 29 Sep 2018 7:09 AM GMT (Updated: 29 Sep 2018 7:09 AM GMT)

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்று ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணி 7-வது முறையாக இந்த பட்டத்தை வெல்கிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு  தற்போது ஓய்வில் உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்.

 டுவிட்டரில் விராட் கோலி கூறியிருப்பதாவது:- நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  கடைசி வரை கடுமையாக போராடிய வங்காளதேச அணிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, ஓய்வில் உள்ளதால், ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா தற்காலிக கேப்டனாக செயல்பட்டது நினைவு கூறத்தக்கது. 

Next Story