இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் - வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா


இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் - வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா
x
தினத்தந்தி 2 Oct 2018 9:36 PM GMT (Updated: 2 Oct 2018 9:36 PM GMT)

முதலாவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் என வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதையொட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக விளங்குகிறது. நாங்கள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறோம். இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகும். இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான அணிகள் வெற்றி பெறுவதில்லை. அதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் நாங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் ஒரு அணியாகும்.

இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக துபாயில் 8 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதனால் இங்கு (ராஜ்கோட்) வெயில் தாக்கம் எங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. இந்திய தொடர் குறித்து நிறைய பேசி விட்டோம். இனி பேசுவதை நிறுத்தி விட்டு, வீரர்கள் களத்தில் தங்களது திறமையை காட்ட வேண்டிய நேரம் இது என்று ஸ்டீவர்ட் லா கூறினார்.

இதற்கிடையே தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் தொடங்கிய பிறகே அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்பது தெரியவந்துள்ளது.


Next Story