மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 21ந்தேதி கவுகாத்தி நகரில் தொடங்குகிறது.
இந்த அணியில் டெஸ்ட் போட்டியில் சிறப்புடன் விளையாடிய ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக விளையாடுகிறார்.
ஆசிய கோப்பையில் கடந்த மாதம் ஓய்வு வழங்கப்பட்ட விராட் கோலி இந்த போட்டி தொடருக்கு தலைமை ஏற்கிறார்.
இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அணி விவரம்
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப், முகமது சமி, கலீல் அகமது, ஷர்துல் மற்றும் கே.எல். ராகுல்.
Related Tags :
Next Story