ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம்–ஐதராபாத் அணிகள் மோதல் நெல்லையில் இன்று தொடங்குகிறது


ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம்–ஐதராபாத் அணிகள் மோதல் நெல்லையில் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 Nov 2018 9:15 PM GMT (Updated: 11 Nov 2018 8:39 PM GMT)

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 37 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

நெல்லை, 

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 37 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் பாபா இந்திரஜித் தலைமையிலான தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேசத்துடன் ‘டிரா’ செய்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அணி தனது 2–வது லீக்கில் அக்ஷாத் ரெட்டி தலைமையிலான ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 15–ந்தேதி வரை நெல்லையில் நடக்கிறது. இந்திய ‘ஏ’ அணிக்காக முரளிவிஜய், விஜய் சங்கர் ஆடுவதாலும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு அஸ்வின் தயாராவதாலும் அவர்கள் தமிழக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story