மிதாலி ராஜூக்கு ஏற்பட்ட நிலைமையே எனக்கும் ஏற்பட்டது சவுரவ் கங்குலி வருத்தம்


மிதாலி ராஜூக்கு ஏற்பட்ட நிலைமையே எனக்கும் ஏற்பட்டது சவுரவ் கங்குலி வருத்தம்
x
தினத்தந்தி 26 Nov 2018 9:15 AM GMT (Updated: 26 Nov 2018 9:15 AM GMT)

தன்னையும் நல்ல பார்மில் இருக்கும்போதே அணியில் சேர்க்காமல் அமர வைத்தார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற மகளிர் உலகக்  கோப்பை 20 ஓவர் தொடரில், இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, மிதாலி ராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, தானும் இதேபோல் நல்ல நிலையில் விளையாடியபோது அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கூறியதாவது:-  ‘மகளிர் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இது நடப்பதுதான். நானும் கேப்டன் பதவிக்குப் பிறகு உட்கார வைக்கப்பட்டேன். பைசலாபாத்தில் என்னை இப்படி உட்கார வைத்தார்கள்.

அப்போது ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தாலும், 15 மாதங்களாக நான் ஆடவே இல்லை.

வாழ்க்கையில் இப்படியும் நடக்கும். மிகச் சிறந்தவர்களுக்கு சில வேளைகளில் கதவு மூடப்படும். மிதாலி ராஜுக்கு இது முடிவு அல்ல, அவரது பயணம் இதோடு முடிந்துவிடாது’ என தெரிவித்துள்ளார்.

Next Story