டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து


டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து
x
தினத்தந்தி 26 Nov 2018 12:29 PM GMT (Updated: 26 Nov 2018 12:29 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

கொழும்பு, 

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன்  தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 

பின்னர் 327 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், 4-வது நாள் ஆட்டம் துவங்கியதும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை தாரைவார்க்க துவங்கியது. 86.4 ஓவர்கள் விளையாடிய இலங்கை 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்று ஒயிட் வாஷ் இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது.

Next Story