இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து


இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து
x
தினத்தந்தி 28 Nov 2018 10:15 PM GMT (Updated: 28 Nov 2018 7:42 PM GMT)

இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்டில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் காலையில் இருந்தே மழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

மழை விட்ட பின்னர் ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் மாலையில் ஆட்டத்தை தொடங்க திட்டமிட்டனர். இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்றும் சிட்னியில் மழை பெய்ய 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு போதிய பயிற்சி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Next Story