பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது


பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Dec 2018 9:30 PM GMT (Updated: 21 Dec 2018 8:59 PM GMT)

20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் (24–ந் தேதி) தொடங்கி 29–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை, 

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் முத்தூட் குழுமம் ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நாளை மறுநாள் (24–ந் தேதி) தொடங்கி 29–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதேபோல் கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்ட போட்டியிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள், சென்னையில் நடைபெறும் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இடையிலான இறுதி சுற்று போட்டி நெல்லையில் அடுத்த மாதம் (ஜனவரி) 22–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான பரிசு கோப்பை மற்றும் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இந்திய அணி வீரர்கள் அம்பத்தி ராயுடு, மொகித் ‌ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டு கோப்பை மற்றும் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் பி.ரமேஷ் (விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்), சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், முத்தூட் நிறுவன துணை போதுமேலாளர் அபினவ் அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story