ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் தந்தை மரணம்: டிவிட்டரில் உருக்கம்


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் தந்தை மரணம்: டிவிட்டரில் உருக்கம்
x
தினத்தந்தி 31 Dec 2018 10:19 AM GMT (Updated: 31 Dec 2018 10:19 AM GMT)

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் தந்தை நேற்று காலமானார். இந்த செய்தியை மிகுந்த வேதனையுடன் ரஷித் கான் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ரஷித் கான். சிறிய நாட்டின் அணியில் ரஷித் கான் இருந்தாலும், இவரின் சுழற்பந்து வீச்சுக்கு சர்வதேச அளவில் அஞ்சாத வீரர்களே இல்லை.

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும், ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், வங்கதேச லீக் அனைத்திலும் ரஷித் கான் தனது பந்துவீச்சில் முத்திரை பதித்துள்ளார்.

மிகக்குறைந்த வயதில் விரைவாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் ரஷித் கான் பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ரஷித் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் போட்டியில் ரஷித் கான் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ரஷித் கானின் தந்தை நேற்று திடீரென காலமானதையடுத்து மிகுந்த வேதனையுடன் அந்த செய்தியை அவர் டிவிட்ரில் பகிர்ந்து, தாய்நாட்டுக்கு சென்றுள்ளார்.

ரஷித் கான் டிவிட்டரில் கூறுகையில், “ இன்று, நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்து விட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை. நான் மனவலிமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் (என் தந்தை) எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் என தெரிந்து விட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை மிஸ் பண்றேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

ரஷித் கான் தந்தை மறைவுக்கு சக கிரிக்கெட் அணி வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story