பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட்


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 11 Jan 2019 10:16 PM GMT (Updated: 11 Jan 2019 10:16 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 77.4 ஓவர்களில் 262 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மார்க்ராம் 90 ரன்களும் (16 பவுண்டரி), டி புருன் 49 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளும், முகமது அமிர், ஹசன் அலி, முகமது அப்பாஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டு விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் சாய்த்தார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.



Next Story