ரிஷாப் பான்டை தொடக்க ஆட்டக்காராக இறக்க வேண்டும் வார்னே யோசனை


ரிஷாப் பான்டை தொடக்க ஆட்டக்காராக இறக்க வேண்டும் வார்னே யோசனை
x
தினத்தந்தி 13 Feb 2019 10:00 PM GMT (Updated: 13 Feb 2019 9:07 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவத

புதுடெல்லி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி, ரிஷாப் பான்ட் இருவரும் விளையாட வேண்டும். ரிஷாப் பான்ட், அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் தொடரக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கூட இறக்கலாம். தற்போது தொடக்க வரிசை பணியை ஷிகர் தவான் சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் ரிஷாப் பான்ட்டை ரோகித் சர்மாவுடன் இறக்கும் போது, இந்திய அணிக்கு நெருக்கடி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் அது ஒரு வித்தியாசமான யுக்தியாக எதிரணிக்கு ஆச்சரியத்தை அளிக்கும். விரைவில் தொடங்க உள்ள இந்தியா–ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின் போது ரிஷாப் பான்டை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைத்து சோதித்து பார்க்கலாம். ஷிகர் தவானை அதற்கு அடுத்த வரிசையில் ஆட வைக்கலாம்.

இவ்வாறு வார்னே கூறினார்.


Next Story