பள்ளி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி


பள்ளி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி
x
தினத்தந்தி 20 Feb 2019 10:40 PM GMT (Updated: 20 Feb 2019 10:40 PM GMT)

பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் பீட்ஸ் அணி தகுதிபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ்-நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் அணி 39 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் செயின்ட் பீட்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் செட்டிநாடு வித்யாஷ்ரம் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


Next Story