மாநில இளையோர் 20 ஓவர் கிரிக்கெட்: திருச்சி அணி ‘சாம்பியன்’


மாநில இளையோர் 20 ஓவர் கிரிக்கெட்: திருச்சி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 27 Feb 2019 9:45 PM GMT (Updated: 27 Feb 2019 7:40 PM GMT)

மாநில இளையோர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், திருச்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோருக்கான) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 4 இடங்களில் நடந்து வந்தது. திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சேலம்-திருச்சி மாவட்ட அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த சேலம் மாவட்ட அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி மாவட்ட அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நவீன் 53 ரன்கள் எடுத்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சேலம் மாவட்ட அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களே எடுத்தது. இதனால் திருச்சி மாவட்ட அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

Next Story