20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் பணிந்தது பாகிஸ்தான்


20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் பணிந்தது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 5 May 2019 10:30 PM GMT (Updated: 5 May 2019 7:49 PM GMT)

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

கார்டிப்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையே சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் (65 ரன்), ஹாரிஸ் சோகைல் (50 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 57 ரன்களும், ஜோ ரூட் 47 ரன்களும் எடுத்தனர். அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஆட்டம் நாளை மறுதினம் லண்டனில் நடக்கிறது.

Next Story