பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஜோஸ் பட்லர் அதிரடி சதத்தால் இங்கிலாந்து 373 ரன்கள் குவிப்பு


பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஜோஸ் பட்லர் அதிரடி சதத்தால் இங்கிலாந்து 373 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 11 May 2019 10:00 PM GMT (Updated: 11 May 2019 6:48 PM GMT)

உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.

சவுதம்டன், 

உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. 50 பந்துகளில் தனது 8–வது சதத்தை அடித்த ஜோஸ் பட்லர் 55 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்சருடன் 110 ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 48 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ 51 ரன்னும் (45 பந்துகளில் 6 பவுண்டரியுடன்), ஜாசன் ராய் 87 ரன்னும் (98 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்) மற்றும் ஜோரூட் 40 ரன்னும் (54 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ‌ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, யாசிர் ஷா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.


Next Story