உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி
x
தினத்தந்தி 22 May 2019 3:12 AM GMT (Updated: 22 May 2019 3:12 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச்சென்றது.

மும்பை,

12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ந்தேதி தொடங்கி ஜூலை 14 ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5 ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. 

உலக கோப்பை போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியினர் மும்பையில் இருந்து விமானம் மூலம்  நள்ளிரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டுச்சென்றனர்.  முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

Next Story