உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 2-வது இன்னிங்சை துவங்கும் சச்சின்


உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 2-வது இன்னிங்சை துவங்கும் சச்சின்
x
தினத்தந்தி 30 May 2019 6:37 AM GMT (Updated: 30 May 2019 6:37 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் சச்சின் டெண்டுல்கர் வர்ணணையாளராக தனது பணியை துவங்க இருக்கிறார்.

மும்பை,

கிரிக்கெட் மதம் என்றால் அதன் கடவுள் சச்சின் என்று ரசிகர்களால் வானளாவ புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டே ஓய்வு பெற்ற போதிலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் குறைந்தபாடில்லை. இன்று துவங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் வர்ணணையாளர் பணியை துவங்க இருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியநேரப்படி பிற்பகலில் தொடங்கும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஆட்டத்தில் இந்தி, ஆங்கிலத்தில் வர்ணணை செய்யப்படுகிறது. இதில் நேரலையில் பிலிப் ஹியூவுடன், சச்சின் டெண்டுல்கர் இணைய உள்ளார். இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் வர்ணணையாளராக களமிறங்குகிறார் என்று தெரிவித்துள்ளது

Next Story