‘பாகிஸ்தானால் இந்திய அணியை வீழ்த்த முடியாது’ ரெய்னா பேட்டி


‘பாகிஸ்தானால் இந்திய அணியை வீழ்த்த முடியாது’ ரெய்னா பேட்டி
x
தினத்தந்தி 1 Jun 2019 10:00 PM GMT (Updated: 1 Jun 2019 8:40 PM GMT)

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

இந்திய வீரர்கள் தற்சமயம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து சிந்தித்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். ஏனெனில் தொடக்க கட்ட ஆட்டங்களில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். முதல் மூன்று லீக் ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு பாகிஸ்தானுக்கு (16–ந்தேதி) எதிராகவும் நமது சாதனைக்குரிய வெற்றிப்பயணமும் தொடரும். பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியாது. அதே சமயம் சில ஆட்டங்களில் இந்தியா தோற்றால் பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் மிகுந்த நெருக்கடிக்குள்ளானதாக மாறி விடும்.

தரமான வீரர்களுடன் இந்தியா சிறந்த அணியாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நமது வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இந்த உலக கோப்பையில் மொத்தம் 9 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருப்பதால், சிறப்பான தொடக்கம் முக்கியமானதாகும். இங்கிலாந்து அணி வெற்றியுடன் இந்த உலக கோப்பை தொடரை தொடங்கி இருக்கிறது. இதே போல் இந்திய அணியும் முதல் 3 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்டால், அதன் பிறகு இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியாது. இந்திய கேப்டன் விராட் கோலி, இந்த உலக கோப்பையில் முக்கியமான வீரராக இருப்பார். நெருக்கடியான தருணத்தில் டோனியின் அனுபவமும் கைகொடுக்கும்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.


Next Story