இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் சென்னையில் டிசம்பர் 15-ந் தேதி நடக்கிறது


இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் சென்னையில் டிசம்பர் 15-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 3 Jun 2019 9:36 PM GMT (Updated: 3 Jun 2019 9:36 PM GMT)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ந் தேதி நடக்கிறது.

புதுடெல்லி,

2019-2020-ம் ஆண்டில் உள்ளூரில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இதன் படி உள்ளூரில் இந்திய அணி 5 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் 12 இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் முறையே தரம்சாலா, மொகாலி, பெங்களூருவிலும், டெஸ்ட் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், ராஞ்சி, புனேயிலும் நடைபெறுகிறது.

வங்காளதேச அணி நவம்பர் மாதத்தில் வருகிறது. அந்த அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. 20 ஓவர் போட்டி டெல்லி, ராஜ்கோட், நாக்பூரிலும், டெஸ்ட் போட்டி இந்தூர், கொல்கத்தாவிலும் நடக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணி டிசம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டி மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத்தில் நடக்கிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ந் தேதி நடக்கிறது. 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி கட்டாக்கிலும் நடைபெறுகிறது.

ஜிம்பாப்வே அணி அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்தில் வந்து மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டிகள் கவுகாத்தி, இந்தூர், புனேயில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஜனவரி மாதத்தில் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் மும்பை, ராஜ்கோட், பெங்களூருவில் நடக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணி மார்ச் மாதத்தில் இந்தியா வந்து 3 ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டிகள் தரம்சாலா, லக்னோ, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கிறது.

Next Story