நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்


நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்
x
தினத்தந்தி 6 Jun 2019 11:01 AM GMT (Updated: 6 Jun 2019 11:01 AM GMT)

போட்டியின் போது நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சவுதம்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சின்போது விக்கட் கீப்பர் தோனி தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக,  பாராமிலிட்டரி சிறப்பு படையின்  முத்திரை போன்ற வடிவம் இடம்பெற்றிருந்த கீப்பிங் கையுறயை பயன்படுத்தி விளையாடினார். தோனியின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை அள்ளியுள்ளது. 

 கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டிணண்ட் பதவி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு பாராமிலிட்டரி பிரிவில் தோனி  பயிற்சியும் மேற்கொண்டார். ஆக்ரா பயிற்சியின் போது, பாராசூட்டில் 5 முறை குதித்து பயிற்சி மேற்கொண்டார் எனவும் கூறப்படுகிறது. 

முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில், ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். பிப்ரவரி 14 ஆம் தேதி  புல்வாமா தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். 

Next Story