ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது


ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றது
x
தினத்தந்தி 8 Jun 2019 11:40 PM GMT (Updated: 8 Jun 2019 11:40 PM GMT)

ஐ.சி.சி.யின் வேண்டுகோளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.

மும்பை,

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ராணுவ முத்திரை பதித்த கையுறையை (குளோவ்ஸ்) உபயோகப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இத்தகைய கையுறையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளில் தனிப்பட்ட லோகோவை பயன்படுத்த அனுமதி கிடையாது, இது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெளிவுப்படுத்தியது.

இந்த நிலையில் ஐ.சி.சி.யின் விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘ஐ.சி.சி.யின் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவது என்பது தான் எங்களது நிலைப்பாடு. விதிமுறைகளை நாங்கள் மீறமாட்டோம். நாங்கள் விளையாட்டை நேசிக்கும் ஒரு தேசம்’ என்றார்.


Next Story