‘போர் அல்ல, பொறுமையாக பாருங்கள்’ - ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள்


‘போர் அல்ல, பொறுமையாக பாருங்கள்’ - ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Jun 2019 11:51 PM GMT (Updated: 15 Jun 2019 11:51 PM GMT)

போர் அல்ல, பொறுமையாக பாருங்கள் என ரசிகர்களுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லாகூர்,

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை சுமார் 100 கோடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இது தான் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாகும். இந்த ஆட்டத்தை இரண்டு நாட்டு ரசிகர்களும் பொறுமையாக பார்த்து ரசியுங்கள் என்பது தான் என்னுடைய செய்தியாகும். இந்த போட்டியை பார்த்து இரு நாட்டு ரசிகர்களும் சந்தோஷப்பட வேண்டுமே தவிர இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் சூழலை மோசமாக்கக்கூடாது. போட்டி என்று வந்து விட்டால் ஒரு அணி வெற்றி பெறும். ஒரு அணி தோல்வி காணும். எனவே ஆட்டத்தை பொறுமையாக பார்த்து ரசிக்க வேண்டும். இதனை போர் என்று கருதக்கூடாது. இந்த போட்டியை போர் என்று நினைப்பவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்க முடியாது. உலக கோப்பை போட்டியில் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வெல்ல முடியும். இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

Next Story