உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு


உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 1:08 PM GMT (Updated: 16 Jun 2019 5:47 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர், 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது,

தற்போது,  இந்திய அணி 46.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் விராட் கோலி  71 ரன்களுடனும் , விஜய் சங்கர்  3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Next Story