ஐ.சி.சி. உயர்மட்ட நடுவர் குழுவில் இருந்து இந்தியாவை சேர்ந்த ரவி நீக்கம்


ஐ.சி.சி. உயர்மட்ட நடுவர் குழுவில் இருந்து இந்தியாவை சேர்ந்த ரவி நீக்கம்
x
தினத்தந்தி 30 July 2019 9:30 PM GMT (Updated: 30 July 2019 8:12 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இடம் பிடித்து இருந்த இயான் கோல்ட் (இங்கிலாந்து) சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இடம் பிடித்து இருந்த இயான் கோல்ட் (இங்கிலாந்து) சமீபத்தில் ஓய்வு பெற்றார். உயர்மட்ட குழுவில் இருந்து இந்திய நடுவர் எஸ்.ரவி நீக்கப்பட்டுள்ளார். அவர் 2015–ம் ஆண்டு முதல் உயர்மட்ட நடுவர் குழுவில் இடம் பிடித்து இருந்தார். உயர்மட்ட குழுவில் புதிய நடுவர்களாக மைக்கேல் காக் (இங்கிலாந்து), ஜோயல் வில்சன் (வெஸ்ட்இண்டீஸ்) ஆகியோரை ஐ.சி.சி. சேர்த்துள்ளது. மற்றபடி உயர் மட்ட நடுவர் குழுவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.


Next Story