டி-20 போட்டிகளில் புதிய சாதனை படைக்க தயாராகும் ரோஹித் சர்மா!


டி-20 போட்டிகளில் புதிய சாதனை படைக்க தயாராகும் ரோஹித் சர்மா!
x
தினத்தந்தி 2 Aug 2019 1:43 PM GMT (Updated: 2 Aug 2019 1:43 PM GMT)

டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா நாளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாடர்ஹில்,

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித்தொடர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், லாடர்ஹில் நகரில் நாளை நடைபெறவிருக்கிறது. 

இதுவரை டி-20 போட்டித் தொடரில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 58 ஆட்டங்களில் 105 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். கெயிலைத் தொடர்ந்து, நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 76 போட்டிகளில் 103 சிக்ஸர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 94 ஆட்டங்களில் 102 சிக்ஸர்கள் சேர்த்து 3-வது இடத்தில் உள்ளார். கெயிலின் 105 சிக்ஸர்களை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 4 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

நாளை நடைபெறும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்கள் அடித்தால், டி-20 வரலாற்றில் அதிகமான சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேன் எனும் பெருமையைப் பெறுவார். டி-20 போட்டியில். இதுவரை 4 சதங்கள், 16 அரைசதங்கள் உள்பட 2,331 ரன்களை ரோஹித் சர்மா குவித்து  அதிகமான ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் எனும் பெருமையை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story