டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான 24-லீக் ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. திருச்சி வாரியர்ஸ் அணி 5 போட்டிகளிலும் தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது.
Related Tags :
Next Story