டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு


டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 9 Aug 2019 1:50 PM GMT (Updated: 9 Aug 2019 1:50 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் 
காஞ்சி வீரன்ஸ்  அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சாய் கிஷோர் தலைமையிலான திருச்சி அணி ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும். ஆனால் பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதில் ஜெயித்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். 


Next Story