ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியின் பெயர் மாறுகிறது


ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியின் பெயர் மாறுகிறது
x
தினத்தந்தி 30 Aug 2019 11:47 PM GMT (Updated: 30 Aug 2019 11:47 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிக்கான டெல்லி அணியின் பெயர் மாற உள்ளது.

புவனேசுவரம்,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் விளையாடும் 8 அணிகளில் ஒன்றான டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியின் பெயர் மாற்றப்படுகிறது. புவனேசுவரத்தை அடிப்படையாக கொண்டு ஒடிசா எப்.சி. என்ற பெயரில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. இதையொட்டி டெல்லி அணி நிர்வாகம், ஒடிசா மாநில விளையாட்டுத்துறையுடன் ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. அக்டோபர் 20-ந்தேதி தொடங்கும் 6-வது ஐ.எஸ்.எல். போட்டியில் ஒடிசா அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்கள் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிக்கு 22 வயதான இந்திய இளம் வீரர் லாலின்ஜூவாலா சாங்தே ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி அணிக்காக ஆடிய அவர் இந்த சீசனில் சென்னை அணிக்காக கால்பதிக்கிறார்.

Next Story