இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு


இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:27 PM GMT (Updated: 16 Sep 2019 11:27 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனையை சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சமயத்தில் ஜிதேந்திர கோத்தாரி, ராகேஷ் பாப்னா ஆகியோர் விளையாட்டு மானேஜர் என்று சொல்லி அந்த வீராங்கனையை சந்தித்து பேசி உள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீராங்கனையை சூதாட்டத்தில் ஈடுபட ஆசைவார்த்தை கூறி பேசியுள்ளனர். இது குறித்து அந்த வீராங்கனை இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் பெங்களூரு போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது.


Next Story