கே.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்


கே.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:19 PM GMT (Updated: 17 Sep 2019 11:19 PM GMT)

கே.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியின் போது சில வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகி சில தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பெற முயற்சித்த விவரம் தற்போது கசிந்துள்ளது. வீரர்கள், சந்தேக நபர்களுடனான தங்களது ‘வாட்ஸ்அப்’ உரையாடல்களை உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story