விராட்கோலிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை


விராட்கோலிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2019 8:07 AM GMT (Updated: 23 Sep 2019 11:23 PM GMT)

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5-வது ஓவரில் பேட்டிங் செய்கையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ரன் எடுக்க ஓடுகையில் தென்ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் தோள்பட்டையில் இடித்தார். இந்த சம்பவம் குறித்து ஆடுகள நடுவர்கள் ஐ.சி.சி. போட்டி நடுவர் ரிச்சர்ட்சனிடம் புகார் தெரிவித்தனர். தவறை ஒத்துக்கொண்ட விராட்கோலி எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாக விதிக்கப்பட்டு இருக்கிறது. 2016-ம் ஆண்டு புதிய விதிமுறை அமல்படுத்திய பிறகு விராட்கோலி இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது இது 3-வது முறையாகும்.


Next Story