பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 24 Sep 2019 11:16 PM GMT (Updated: 24 Sep 2019 11:16 PM GMT)

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

சூரத்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் சூரத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்கள் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அறிமுக வீராங்கனையாக களம் கண்ட 15 வயதான ஷபாலி வர்மா ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்தார்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 3 மெய்டனுடன் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story