3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியிடம் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி


3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணியிடம் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 9 Oct 2019 11:40 PM GMT (Updated: 9 Oct 2019 11:40 PM GMT)

3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியிடம் பாகிஸ்தான் மீண்டும் தோல்வியடைந்தது.

லாகூர்,

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. ஒஷாடா பெர்னாண்டோ 78 ரன்கள் (48 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது.

Next Story