சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட மர்க்ராம் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கம்
சரியாக விளையாடாத ஆத்திரத்தில் காயம் ஏற்படுத்தி கொண்ட பேட்ஸ்மேன் மர்க்ராம் இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
ராஞ்சி,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினம் மற்றும் புனே நகரில் நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றி உள்ளது.
இந்த போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேனான எய்டன் மர்க்ரம் சரியான முறையில் விளையாடவில்லை. முதல் போட்டியில் அவர் 5 மற்றும் 39 ரன்கள் எடுத்த நிலையில், 2வது போட்டியிலும் சரியாக விளையாடாமல் வீழ்த்தப்பட்டார்.
இதனால் வருத்தத்தில் இருந்த மர்க்ராம் ஆத்திரத்தில் தனது கையை திடப்பொருள் ஒன்றின் மீது வேகத்துடன் அடித்துள்ளார். இதில் அவரது மணிக்கட்டு பகுதி காயமடைந்தது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story