டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியுடன் பெடரர் வெளியேற்றம்


டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியுடன் பெடரர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 16 Nov 2019 11:39 PM GMT (Updated: 16 Nov 2019 11:39 PM GMT)

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியுடன் ரோஜர் பெடரர் வெளியேறினார்.

லண்டன்,

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரருக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 36 நிமிடங்கள் நடந்தது.

முன்னதாக ‘அகாசி’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 7-6 (4) என்ற செட் கணக்கில் டேனில் மெட்விடேவை (ரஷியா) வீழ்த்தினார். இந்த பிரிவில் ரபெல் நடால் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தலா 2 வெற்றி பெற்று சமநிலை வகித்த போதிலும் செட் அடிப்படையில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றார். நடால் ஆண்டின் இறுதிவரை ‘நம்பர் ஒன்’ என்ற திருப்தியுடன் வெளியேறினார்.

Next Story