நடுவர் அவுட் தராததால் குழந்தை போல அழுது அடம்பிடித்த கிறிஸ் கெயில் -வீடியோ
மெசான்ஸி சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் நடுவர் அவுட் கொடுக்காததால், பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் செய்த செயல் அனைவரையும் நகைப்புக்கு உள்ளாக்கியது.
ஜோகன்ஸ் பர்க்
தென்னாப்பிரிக்காவில் மெசான்ஸி சூப்பர் லீக் கிரிக்கெட்போட்டி தொடர் நடந்து வருகிறது. ராக்ஸ் மற்றும் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்கு இடையேயான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி ராக்ஸ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலக்கை நோக்கி ராக்ஸ் அணி விளையாடத் தொடங்கியபோது ஸ்டார்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெய்ல் பந்துவீசத் தொடங்கினார். அப்படி வீசிய முதல் ஓவரின் கடைசிப்பந்து பேட்ஸ்மேனின் காலிடுக்கில் சென்றது. ஆனால் கிறிஸ் கெயில் அதற்கு அவுட் கேட்டு அப்பீல் செய்தார்.
ஆனால், நடுவர் அவுட் தர மறுக்கவே, சின்னக் குழந்தை அழுது அடம்பிடிப்பது மாதிரி கெய்ல் செய்த ரியாக்ஷன் நடுவரையே நகைப்புக்கு உள்ளாக்கியது. சக வீரர்களும் கெயிலின் செயலால் புன்னகைத்தனர்.
.@henrygayle makes a 'cry-baby' face after umpire says 'no' #MSL#MSL2019@msljozistarspic.twitter.com/i01oPD5nsv
— CricTracker (@Cricketracker) 23 November 2019
Related Tags :
Next Story