20 ஓவர் கிரிக்கெட்டில் மாலத்தீவு 8 ரன்னில் சுருண்டது - 9 வீராங்கனைகள் டக்-அவுட்


20 ஓவர் கிரிக்கெட்டில் மாலத்தீவு 8 ரன்னில் சுருண்டது - 9 வீராங்கனைகள் டக்-அவுட்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:57 PM GMT (Updated: 7 Dec 2019 10:57 PM GMT)

20 ஓவர் கிரிக்கெட்டில் மாலத்தீவு அணி 8 ரன்னில் சுருண்டது. அதில் 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆகினர்.

காத்மண்டு,

தெற்காசிய விளையாட்டில், பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று நடந்த நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் மாலத்தீவு 11.3 ஓவர்களில் வெறும் 8 ரன்னில் சுருண்டது. 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள். தொடக்க வீராங்கனை அய்மா அஷ்சாத் 1 ரன் எடுத்தார். மற்ற 7 ரன்களும் எக்ஸ்டிரா வகையில் (வைடு) கிடைத்தது. இந்த ஆட்டம் ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்றது. பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் 2-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். மாலி அணி 6 ரன்னில் முடங்கியதே மோசமான ஸ்கோராக நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலக்கை நேபாளம் அணி 7 பந்துகளில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story