20 ஓவர் கிரிக்கெட்: காஞ்சீபுரம் அணி வெற்றி


20 ஓவர் கிரிக்கெட்: காஞ்சீபுரம் அணி வெற்றி
x
தினத்தந்தி 21 Jan 2020 11:26 PM GMT (Updated: 21 Jan 2020 11:26 PM GMT)

திண்டுக்கல் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், காஞ்சீபுரம் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான மாவட்டங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் காஞ்சீபுரம்-திண்டுக்கல் மாவட்ட அணிகள் மோதின. முதலில் ஆடிய காஞ்சீபுரம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அருண் 70 ரன்கள் சேர்த்தார். பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களே எடுத்தது. இதனால் காஞ்சீபுரம் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஞ்சீபுரம் அணி வீரர் ஆஷிஷ்குமார் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் சேலம், நீலகிரி, தேனி, வேலூர், திருவாரூர், ஈரோடு, நாமக்கல், கோவை, கன்னியாகுமரி, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன.

Next Story