ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு


ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 12:17 AM GMT (Updated: 23 Jan 2020 12:17 AM GMT)

ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருக்கும் தமிழக அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது. தமிழக அணி அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் பரோடா (பிப்ரவரி 4-7), சவுராஷ்டிரா (பிப்ரவரி 12-15) அணிகளை எதிர்கொள்கிறது. பரோடா, சவுராஷ்டிரா அணிகளுக்கு எதிரான போட்டிக்கான தமிழக அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டி நேற்று அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அணி வீரர்கள் வருமாறு:-

பாபா அபராஜித் (கேப்டன்), அபினவ் முகுந்த் (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், சூர்ய பிரகாஷ், கவுசிக் காந்தி, பாபா இந்திரஜித், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் கிஷோர், சித்தார்த், நடராஜன், முகமது, அபிஷேக் தன்வார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, முகுந்த், விக்னேஷ்.


Next Story