ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங்


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
x
தினத்தந்தி 4 Feb 2020 8:12 AM GMT (Updated: 4 Feb 2020 8:12 AM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணி பலப்பரிட்சை நடத்துகின்றன.

போட்செஸ்ட்ரூம்,

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போர்ட்செஸ்ட்ரூமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வரும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

இத்தொடர் முழுவதும் இந்த இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலிமையுடன் உள்ளது. அதைப்போன்றுபாகிஸ்தான் அணியிலும் அதிவேக பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இப்போட்டி இரு அணிக்கும் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story