கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி முதலிடம்


கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி முதலிடம்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:44 PM GMT (Updated: 21 Feb 2020 10:44 PM GMT)

கிரிக்கெட் போட்டியில் ராமச்சந்திரா பள்ளி முதலிடம் பிடித்தது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி (14 வயதுக்கு உட்பட்டோர்) சென்னையில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன்-ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி அணிகள் மோதின. முதலில் ஆடிய நெல்லை நாடார் பள்ளி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. பிரகதீஷ் 68 ரன்னும், சாய் சிம்ஹா ஆட்டம் இழக்காமல் 49 ரன்னும் சேர்த்தனர். ராமச்சந்திரா பள்ளி தரப்பில் அபினவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராமச்சந்திரா பள்ளி அணி 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அதிகபட்சமாக அபினவ் 78 ரன்னும், சரங்தார் ஆட்டம் இழக்காமல் 68 ரன்னும் எடுத்தனர்.


Next Story