20 ஓவர் கிரிக்கெட்: லயோலா அணி தென் மண்டல போட்டிக்கு தகுதி


20 ஓவர் கிரிக்கெட்: லயோலா அணி தென் மண்டல போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 28 Feb 2020 11:11 PM GMT (Updated: 28 Feb 2020 11:11 PM GMT)

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லயோலா அணி, தென் மண்டல போட்டிக்கு தகுதிபெற்றது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ரெட்புல் இந்தியா நிறுவனம் சார்பில் கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவில் 34 நகரங்களில் நடத்தப்படுகிறது. இதில் தென் மண்டலத்துக்கு உட்பட்ட 7 நகரங்களில் ஒன்றான சென்னை மாநகர கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் லயோலா-எஸ்.ஆர்.எம். கல்லூரி அணிகள் மோதின. முதலில் ஆடிய எஸ்.ஆர்.எம்.அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய லயோலா அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் தென் மண்டலத்தில் மற்ற நகரங்களில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுடன் விளையாட லயோலா கல்லூரி அணி தகுதி பெற்றுள்ளது. தென் மண்டல போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தேசிய போட்டிக்கு முன்னேறும்.

Next Story