பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ; இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீச்சு


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ; இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீச்சு
x
தினத்தந்தி 29 Feb 2020 3:45 AM GMT (Updated: 29 Feb 2020 3:45 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

மெல்போர்ன்,

10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 

இதில் ‘ஏ’ பிரிவில் மெல்போர்னில் இன்று நடைபெறும் ஆட்டத்தில்,  தொடர்ந்து வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய இந்திய அணியும், இதுவரை வெற்றி எதையும் பெறாத இலங்கை அணியும் மோதுகின்றன. 

 இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. 


Next Story